ISBN : 9789390677238
மா.சுப்பிரமணியன் சாலை விபத்தொன்றில் மயிரிழையில் உயிர்தப்பி இனி முன்பு போல் இயங்க முடியாது என்று மருத்துவர்களால் கைடவிடப்பட்டவர். மன உறுதி, விடா முயற்சி, தொடர் பயிற்சி இதன் காரணமாக நடப்பதற்கே சிரமம் என்கிற நிலைமையை மாற்றி, ஓடத் தொடங்கி மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தினார். பிறகு மாரத்தான் ஓட துவங்கி எல்லோரையும் பெரும் வியப்புக்குள்ளாக்கினார். ஒன்றோடு நிற்காமல் தொடர்ந்து நீண்ட பயணம். இதுவரை 125 மாரத்தான்கள் ஓடி பல்வேறு உலக சாதனைகளைப் புரிந்தார்.
அவரின் தன்னம்பிக்கை எத்தகைய பலம் கொண்டது என்பதை விளக்கும் உன்னதமான படைப்புதான் “ஓடலாம் வாங்க…”